வடக்கு 2 குழுமப் பள்ளிகளுக்கிடையிலான நாடகப் போட்டி 2017
வடக்கு 2 குழுமப் பள்ளிகளுக்கிடையிலான நாடகப் போட்டி 2017
மாணவர்கள் நாடகப் போட்டியில் கலந்துகொண்டதன் வழி மிகவும் பயனடைந்தனர். அவர்கள் தங்களின் நடிப்பாற்றலையும் பேச்சாற்றலையும் வெளிப்படுத்தித் தமிழில் தன்னம்பிக்கையோடு பேசினர்.
போட்டியில் பங்குபெறாத மாணவர்கள், பரிசளிப்பு விழாவுக்கு முன் நடத்தப்பட்ட புதிர்ப்போட்டி ஒன்றில் கலந்துகொண்டனர். அதில் தமிழ்மொழி, கலாசாரம் பற்றிக் கேட்கப்பட்ட கேள்விகளுக்கு மாணவர்கள் சரியாக விடையளித்துப் பரிசு பெற்றார்கள். இந்த நிகழ்ச்சியில் பங்குபெற்ற அனைத்து மாணவர்களுக்கும் இது ஒரு பயன்மிக்க கற்றல் அனுபவமாக அமைந்தது.